யாழில் இதுவரையில் 160 பேருக்கு கொரோனா - அவதானமாக செயற்படுமாறு அரச அதிபர் அறிவுறுத்து - Yarl Voice யாழில் இதுவரையில் 160 பேருக்கு கொரோனா - அவதானமாக செயற்படுமாறு அரச அதிபர் அறிவுறுத்து - Yarl Voice

யாழில் இதுவரையில் 160 பேருக்கு கொரோனா - அவதானமாக செயற்படுமாறு அரச அதிபர் அறிவுறுத்து




யாழில்1305 குடும்பங்களை சேர்ந்த 3736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் இன்றுவரை  160 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில்
குறித்த தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதனடிப்படையில் 
யாழ் மாவட்டத்தில் இன்றைய நிலையில் 
1305 குடும்பங்களை சேர்ந்த 3736 நபர்கள், சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்த அரசஅதிபர்.

எனினும் யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலம் மேலும் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் 


 மேலும் யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில் சந்தை விடயம் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post