உலகத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கண விருது பெறுகிறார் பேராசிரியர் சண்முகதாஸ் - Yarl Voice உலகத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கண விருது பெறுகிறார் பேராசிரியர் சண்முகதாஸ் - Yarl Voice

உலகத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கண விருது பெறுகிறார் பேராசிரியர் சண்முகதாஸ்



தமிழ்நாடு அரசு உலகத் தமிழ்ச்சங்கம் மதரையின் சார்பில் இலக்கியம், இலக்கணம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூவருக்கு ஆண்டு தோறும் உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க இலக்கண விருது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியருமாகிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

இவ்விருது வழங்கும் விழா   விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் விருதைக் கையளிக்கவுள்ளதாகவும்  உலகத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் முனைவர் தா.லலிதா அறிவித்துள்ளார்.

இலக்கண விருது பெறும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு பலரும் நல்வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post