கொரோனா தடுப்பூசி தொடர்பில் வடக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice கொரோனா தடுப்பூசி தொடர்பில் வடக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

கொரோனா தடுப்பூசி தொடர்பில் வடக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல்



 
ஜனவரி மாதம் இறுதி வாரம் முதல் அரசாங்க சுகாதாரத்துறையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.  தற்போது பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

 இந்நிலையில் இரண்டாவது கட்டமாக தனியார் சுகாதாரத் துறையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், பல் வைத்தியர்கள், பதிவு வைத்திய அதிகாரிகள் (சுஆழு) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. 

இதற்கு மேலதிகமாக மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கும் இத்தடுப்பூசியானது வழங்கப்படவுள்ளது.

எனவே வடமாகாணத்தில் இயங்கும் தனியார் வைத்தியசாலைகளின் நிர்வாகம் தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர்களுக்கு தமது வைத்தியசாலை அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுடன் தொடர்புகொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post