பொத்துவில் பொலிகண்டி போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பலரும் கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டியே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்மைய முண்ணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரிடம் மாங்குளம் பொலிஸார் இன்று விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
இதே போன்று யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிடமும் யாப்ப்பாணத்தில் பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர்.
இதேவேளை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment