உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட 11 தீவிரவாத அமைப்புகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நேரடியாகவும் மறைமுகமாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு உதவியவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மதத்தீவிரவாதத்தையே கண்டிக்கவேண்டும் மதங்களையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹகாபிசத்தை அடிப்படையாக கொண்ட தீவிரவாதமே இந்த தாக்குதலிற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment