மனித உரிமை பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து உருவாக்கப்படவுள்ள விசேட பிரிவிடம் இலங்கையின் பயங்கரவாத யுத்தம் குறித்த அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்றவேளை இலங்கைக்கான பிரிட்டனின் தூதரகம் இங்கிருந்து அனுப்பிவைத்த அனைத்து தகவல்கள் அறிக்கைகளையும் விசேட பிரிவிடம் வழங்கவேண்டும் என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவி;க்கையிலேயே ஹர்சா சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நான் விசேட பிரிட்டனின் ்ஆவணங்கள் குறித்து கருத்து தெரிவிக்கப் போவதிலலை ஆனால்அனைத்து ஆதாரங்களையும் அந்த பிரிவிடம் வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட விசேட பிரிவு அனைத்து ஆதாரங்களையும் ஆராய்வது குறித்து எந்த பிரச்சினையும் இருக்க முடியாது என ஹர்சா சில்வா தெரிவித்துள்ளார்.
.
Post a Comment