மீண்டும் எழும் யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி -நாளை திறந்து வைக்கப்படுகிறது- - Yarl Voice மீண்டும் எழும் யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி -நாளை திறந்து வைக்கப்படுகிறது- - Yarl Voice

மீண்டும் எழும் யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி -நாளை திறந்து வைக்கப்படுகிறது-




யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு நாளை திறந்து வைக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.
 
இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

 மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம்  கடந்த ஜனவரி 11அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதிக்கு அமைய, இந்த அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் நாளை திறந்து வைக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post