புலிகளின் காவல் துறையின் சீருடையை போன்ற உடை என சொல்வதெல்லாம் எந்த நீல சேட்டை கண்டாலும், எல்லா பற்றைக்கு பின்னாலும் ஏதோ ஒரு பூதம் இருப்பதாகவும், ஒரு தசாப்தகாலத்தின் பின்னரும் பொலிசார் பயந்து கொண்டு, குலை நடுங்கியிருப்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளதே தவிர, வேறு எந்த குற்றச்செயலையும் வெளிப்படுத்தவில்லை என்பதை நீதிவானிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வழக்கின் பின்னர் ஊடகங்களுடன் பேசிய போது இதனை தெரிவித்தார்.
ஆண்கள் அணியும் பொதுவான நிறம் நீல நிறம். காக்கியுடையை அணிந்தால் பாதுகாப்பு பிரிவின் உடையை அணிந்து விட்டார் என சொல்வார்கள். கொழும்பு மாநகரசபையில் வாகன சிட்டை அறவிடுபவர்கள் இதேபோன்ற ஒரு ஆடையைத்தான் அணிந்திருப்பார்கள்.
நீதிவான் பொலிசாரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். ஊழியர்களின் உடையில் புலிகளின் இலச்சினை உள்ளதா என. பொலிசார் இல்லையென்றார்கள்.
அதற்கு மேலதிகமாக நாம், அவர்களுடைய சீருடையில் இருந்தது யாழ் மாநகரசபையின் இலச்சினை.
வேறு மாநகரசபையினால் செய்ய முடிந்ததை ஏன் யாழ் மாநகரசபையினால் செய்ய முடியாது.
ஒரேநாடு ஒரே சட்டம் என கூரையிலிருந்து கூவிக் கொண்டிருந்தால் போதாது. அது நடைமுறையில் இல்லையென்பதை பொலிசார் இன்று நடைமுறையில் காண்பித்துள்ளனர் என்றார்.
Post a Comment