புதுவருடத்தின் பின்னர் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடுகள் நிலவலாம் என இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடத்திற்காக கட்டணங்கள் தங்களிற்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள சங்கத்தின் அதிகாரியொருவர் நாங்கள் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தினை மேற்கொண்டு வருகின்றோம்,
ஆனால் புதுவருடத்தினை கொண்டாடுவதற்கான கொடுப்பனவுகள் கூடகிடைக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய வருடங்களில் எங்களிற்கான கொடுப்பனவுகள் ஏப்பிரல் ஏழாம் எட்டாம் திகதிகளில் கிடைத்துவிடும் என தெரிவித்துள்ள அவர் ஆனால் இந்த வருடம் இன்னமும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாளை புத்தாண்டு பல சாரதிகள் தங்கள் ஊருக்குசெல்லவுள்ளனர் இதுவரை கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவி;ல்லை எனவும்அவர்தெரிவித்துள்ளார்.
புதுவருடத்தின் பின்னர் குறைந்த எண்ணிக்கையானவர்களே பணி;க்கு திரும்புவார்கள் இதன் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment