யாழில் புதிதாக களமிறக்கப்பட்ட காவல்படை - Yarl Voice யாழில் புதிதாக களமிறக்கப்பட்ட காவல்படை - Yarl Voice

யாழில் புதிதாக களமிறக்கப்பட்ட காவல்படை



யாழ்ப்பாணத்தில் புதிதாக காவல் படையொன்று இன்று புதன்கிழமை களமிறக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர காவல் படை முதல் தடவையாக இன்று காலை தமது பணியை ஆரம்பித்துள்ளது.

 யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக குறித்த மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. 

குறித்த மாநகர பாதுகாப்பு படை நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த மாநகர பாதுகாப்பு படை கண்காணித்தது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post