மியன்மாரில் ஏற்பட்டுள்ள இராணுவ ஆட்சியை போன்று இலங்கையிலும் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதாக, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமை தொடர்பில், ஊடக அடக்குமுறை தொடர்பிலும் மீனவர் பிரச்சினை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள விடயம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.
Post a Comment