உலக பூமி தினத்தை முன்னிட்டு அழகுபடுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம் - Yarl Voice உலக பூமி தினத்தை முன்னிட்டு அழகுபடுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம் - Yarl Voice

உலக பூமி தினத்தை முன்னிட்டு அழகுபடுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்



உலக பூமி தினம் ஆகிய இன்றைய தினம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி வீதியில் உள்ள பனை மரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது 

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயிரன் தலைமையில் பனைமரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

 நல்லூர் பிரதேச சபையில் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை  அழகு படுத்துவதற்கென  10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை  அழகுபடுத்தும்  வேலைத்திட்டம்  மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் 

 அதன் முதற்ட்டமாக இன்றைய தினம் யாழ்ப்பாண நகரின் வரவேற்பு வளைவு அமைந்துள்ள இடத்திலிருந்து செம்மணி வீதியில்  உள்ள பனை மரங்களை செதுக்கி வடிவமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது குறித்த நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post