யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
மணிவண்ணன் சார்பாக, ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு, யாழ் நீதிமன்றில் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தது. இதில் இளம் பெண் வழக்கறிஞர்கள் பலரும் உள்ளடங்கும்.
இந்நிலையில், ரூபா. 2 லட்சம் பிணையில், மணிவண்ணன் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல்துறையால் பதிவு செய்ய்யப்பட்ட வழக்கு, விசாரணைகளின் பின்
சாதாரண குற்றவியல் சட்டத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment