இன்று (13) இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காலப்பகுதிக்குள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் ஊடாக வெளியே செல்வதற்கும் அனுமதி இல்லையென அவர் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவையாளர்கள் மாத்திரம் குறித்த காலப்பகுதிக்குள் பயணங்களை மேற்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment