வடக்கு மாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா - Yarl Voice வடக்கு மாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா - Yarl Voice

வடக்கு மாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா




வடக்கில் 7 பேருக்கு இன்று கொரோனா தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை  கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 478 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இவற்றில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது. அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பூவரசம் குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தலா ஒரு நோயாளிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.' என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post