பருத்தித்துறையில் 91 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலை மீட்பு - மினி பஸ்ஸிடன் ஒருவர் கைது - Yarl Voice பருத்தித்துறையில் 91 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலை மீட்பு - மினி பஸ்ஸிடன் ஒருவர் கைது - Yarl Voice

பருத்தித்துறையில் 91 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலை மீட்பு - மினி பஸ்ஸிடன் ஒருவர் கைது




வடமராட்சி கடற்பரப்பில் தொடரும் சட்டவிரோத கடல் நடவடிக்கை மூலம் இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டிற்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்தி வரும் சம்பவங்கள் கடந்த நாட்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

யாழ்.ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை - சுப்பர்மடம் கடற்பரப்பில் இன்று (மே-04) அதிகாலை 01.00 மணியளவில் 91 கிலோ கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 'ரோசா' ரக மினிபஸ் மற்றும் சாரதியும் கைது செய்யப்பட்ட நிலையில் படகில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.

அத்துடன் வடக்கு கடலில் இவ்வாறான சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால் இந்தியாவில் உள்ளவர்கள் மூலம் யாழ். குடாநாட்டிற்குள்ளும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post