சீனாவில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் உத்தியோக பூர்வ செய்தியூடகமான க்ஸின்ஹுவா செய்தி நிறுவனம் சீனாவில் உள்ள 71 ஆறுகள் எச்சரிக்கை நீர் மட்ட அளவை தாண்டி ஓடுவதாக தெரிவித்துள்ளது. அதி தீவிரமான இந்த காலநிலை மாற்றத்திற்கு புவி வெப்பமாதலே காரணம் என சீனாவின் காலநிலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சீனாவின் தென் மத்திய பகுதிகளில் என்றுமில்லாத அளவுக்கு மழைவீழ்ச்சி அதிகமாக உள்ளது. இனிவரும் வாரங்களிலும் யங்ற்ச பகுதி உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனி தொடக்கம் ஆவணி வரை நாடு முழுவதும் பாரிய வெள்ள அனர்த்தத்தில் சிக்கி தவிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாத ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் மற்றும் ஜியாங்க்சு பகுதிகள் கடும் சூறாவளியில் சிக்கி 12 பேர் உயிரிழந்தும் 100க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment