கடந்த பத்து வருடங்களுக்கும் அதிகமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இருக்கி்ன்ற யாழ். மாநகர சபை ஊழியர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நிரந்தர நியமனங்களைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற குறித்த சந்திப்பில், நீண்ட காலமாக நிரந்தர நியமனம் இன்றி 44 பணியாற்றி வருகின்ற நிலையில், எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாக தெளிவுபடு்த்தினர்.
பணியாளர்களின் கருத்துக்களை செவிமடுத்த கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நியாயமான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
Post a Comment