ஜனாதிபதியவர்களே நீங்கள் இந்த நாட்டின் பிரஜைகளுடனும்,இந்த நாட்டின் பொருளாதாரத்துடனும்,இந்த நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்துடனும் விளையாடுகின்றீர்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 ஏன் நெருக்கடியாக மாறியது என ஜனாதிபதி பணிவாக தன்னை தானே கேட்டுக்கொள்ளவேண்டும் சுய அலசலை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை தாங்களே சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளனர் என ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தவர்களும் கருதுவார்கள் என்றால் அது மேலும் கொரோனோ தொற்றிற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment