பி.சி.ஆர். பரிசோதனை நடத்தக் கோரி போகம்பறை சிறையில் கைதிகள் ஆர்ப்பாட்டம்! - Yarl Voice பி.சி.ஆர். பரிசோதனை நடத்தக் கோரி போகம்பறை சிறையில் கைதிகள் ஆர்ப்பாட்டம்! - Yarl Voice

பி.சி.ஆர். பரிசோதனை நடத்தக் கோரி போகம்பறை சிறையில் கைதிகள் ஆர்ப்பாட்டம்!



போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று அங்குள்ள கட்டடக் கூரையின் மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

கைதிகளுக்கு விரைவாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளல் மற்றும் விரைவாக பிணை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை இன்றிலிருந்து முன்னெடுக்கின்றனர்.

சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

சுமார் 40 கைதிகள் வரை இவ்வாறு கூரை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post