இராணுவத்தினரால் அச்சுவேலி நகரில் கிருமி தொற்று நீக்கல் - Yarl Voice இராணுவத்தினரால் அச்சுவேலி நகரில் கிருமி தொற்று நீக்கல் - Yarl Voice

இராணுவத்தினரால் அச்சுவேலி நகரில் கிருமி தொற்று நீக்கல்



ராணுவத்தினரால் இன்று காலை அச்சுவேலி நகரில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

 யாழ் மாவட்டத்தில் கொரொனா தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வின் வழிகாட்டுதலில் ராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவு தளபதி யின் வழிகாட்டுதலின் கீழ் ராணுவத்தின் 521 ஆவது பிரிகேட் படைப்பிரிவினரால்அச்சுவேலி நகரப்பகுதி,சந்தை நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது 

யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் அதிகளவில்ஒன்று கூடும் இடங்களில் இராணுவத்தினரால் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

0/Post a Comment/Comments

Previous Post Next Post