கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அவுஸ்திரேலியர் களிற்கு எதிராக கடும் அபராதம் விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வரும் அவுஸ்திரேலிய பிரஜைகளிற்கு 66000 டொலர் அபராதம் விதிக்கப்படலாம் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு நாடு திரும்புவதற்கான தடை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்பதை சுகாதார அமைச்சர் கிரெய்க் ஹன்ட் உறுதி செய்துள்ளார்.
உயிரியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அபராதத்தை விதிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலிய நிலையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அபராதத்துடன் ஐந்துவருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வந்தவர்களில் கையாளமுடியாத அளவிற்கு அதிகளவானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment