7 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்திய சீமான் - Yarl Voice 7 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்திய சீமான் - Yarl Voice

7 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்திய சீமான்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, 7 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக சீமான் தெரிவித்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சீமான் மற்றும் பாரதிராஜா தலா 5லட்சம் வழங்கினர். அப்போது, தனது தந்தை மறைவிற்கு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்ததற்கும் நன்றியும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, 7 பேர் விடுதலையில், நாங்கள் எப்படி உறுதியாக இருக்கிறோமோ, அதேபோன்று முதலமைச்சரும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ‘7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கின் முடிவைப் பொறுத்து நாம் முடிவெடுப்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாகக் கூறினார். காங்கிரஸ் 7 பேர் விடுதலை எதிர்ப்பதைப் பற்றி கண்டு கொள்ள வேண்டாம் என்றும் சீமான் கூறினார்.

மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும் பேசியிருக்கிறோம் நல்ல முடிவு எடுப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார் என்று கூறிய சீமான், திமுகவின் ஆட்சி நன்றாக இருப்பதாக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், முதலமைச்சரை நேரில் சந்தித்தது மிகவும் பெருமையான ஒரு சந்திப்பாக இருந்தது. மேலும், இந்த சந்திப்புக்கு வேறொரு காரணமும் உண்டு. என்னுடைய தந்தை இறந்ததற்கு ஒரு முதலமைச்சராக அறிக்கை விட்டிருந்தார். அதோடு அவர் விட்டு இருக்கலாம், ஆனால் எனக்கு தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியது மனதுக்கு இதமாக இருந்தது என்றார்.

அப்போது, ‘தி பேமிலி மேன் 2’ சீரியலை ஹிந்தி மொழியில் வெளிவந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘ஈழத் தமிழர்களை வேண்டுமென்றே அவமதிப்பதற்காக செய்கிறார்கள், ஹிலாரி கிளின்டனே அங்கு நடைபெற்றது இனத்திற்கான விடுதலை போர்’ என தெரிவித்துள்ளார் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post