யாழில் இன்று கொரோனாவால் நான்கு பேர் இன்று உயிரிழப்பு..! - Yarl Voice யாழில் இன்று கொரோனாவால் நான்கு பேர் இன்று உயிரிழப்பு..! - Yarl Voice

யாழில் இன்று கொரோனாவால் நான்கு பேர் இன்று உயிரிழப்பு..!




யாழ்ப்பாணத்தில் இன்று நால்வர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் 65 தொடக்கம் 85 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவரும்  இன்று உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 912 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post