யாழில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி நிகழ்வை நடத்தியவர்கள் கட்டாய தனிமைப்படுத்தல் - Yarl Voice யாழில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி நிகழ்வை நடத்தியவர்கள் கட்டாய தனிமைப்படுத்தல் - Yarl Voice

யாழில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி நிகழ்வை நடத்தியவர்கள் கட்டாய தனிமைப்படுத்தல்



நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கோவிட் கட்டுப்பாட்டுக்கான முடக்க நிலையை மீறி வீடுகள் மற்றும் கோவில்களில் மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை நடத்தியவர்கள் பருத்தித்துறையில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதி யில் கோவிட் கட்டுப்பாடுகளை மீறி பிறந்தநாள் மற்றும் தொட்டிலிலிடும் கொண்டாட்டங்களை நடாத்திய 10 பேர் மற்றும் கோவில் திருவிழாவை  கட்டுப்பாடுகளைமீறி மாதனைப்பகுதியில் அதிகளவான மக்கள் ஒன்று கூட்டி  கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது மேற்கொண்டோர் பற்றி பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் ரொனால்ட் தலைமையில் கிராம உத்தியோகத்தர்கள் பருத்தித்துறை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட பரிசோதனையின்போது கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை ஒழுங்கமைத்த வர்கள் இனங்காணப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு அவர்களை 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர்

சம்பவம் பற்றி தெரியவருவதாவது கற்கோவளம் பருத்தித்துறை  பகுதியில் இருவர் தமது 50வது பிறந்த நாள் நிகழ்வை ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் மக்களை ஒன்று கூட்டி பொது சுகாதார நடைமுறைகளுக்கு முரணான விதத்தில் நிகழ்வுகளை நடத்திய மையும், வெள்ளிக்கிழமை குழந்தை பிறந்து முப்பத்தோராம் நாள் நிகழ்வுகளை அதிகளவான மக்களை கூட்டி நிகழ்த்திய மையம் தொடர்பாகவும் இனங் காணப்பட்ட குறித்த குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட தோடு இந்நிகழ்வில் அமைச்சர் ஒருவரும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மாதனைப் பகுதியில் கோவில் திருவிழா ஒன்று பொது சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும் அதனை மீறி அதிகளவான மக்கள் ஒன்றுகூடி பொங்கல் நிகழ்வுகளை நடத்தியமை நேரடி பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் கோயில் நிர்வாகத்திற்கு பொறுப்பான தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி மக்களை ஒன்று திரட்டிய குற்றத்திற்காக சுய தனிமைப்படுத்த லுக்கு உட்படுத்தப்பட்டனர் தற்போது நாட்டில் கொரோனாபரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அது சமூகத்தொற்றாக மாறி இருக்கின்ற நிலையில் இவ்வாறு அதிகளவான மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை நடத்துவது சமூகத்தை மிகப்பெரிய ஆபத்திற்கு இட்டுச் செல்லும் என்பதால் பொதுமக்கள் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

0/Post a Comment/Comments

Previous Post Next Post