வடக்கு வைத்தியசாலைகள் நிதியின்றி தவிப்பு- கொரோனா நிதியில் ஆளுநர் வீடு, மலசலகூடம் அமைப்பு - Yarl Voice வடக்கு வைத்தியசாலைகள் நிதியின்றி தவிப்பு- கொரோனா நிதியில் ஆளுநர் வீடு, மலசலகூடம் அமைப்பு - Yarl Voice

வடக்கு வைத்தியசாலைகள் நிதியின்றி தவிப்பு- கொரோனா நிதியில் ஆளுநர் வீடு, மலசலகூடம் அமைப்பு




கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள அரச உத்தியோத்தகர்களிடம் கடந்த வருடம் ஆளுநர் அலுவலகம் திரட்டிய 2 கோடியே 38 இலட்சம் ரூபா நிதி பயன்படுத்தப்படாமல் இன்னமும் வங்கியில் வைப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.
.
இந்த நிதி பிரதி பிரதம செயலாளர்( நிதி) அலுவலக வங்கி கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு பணிக்கென திரட்டப்பட்ட அரச ஊழியர்களின் நிதியில் 30 இலட்சம் ரூபாவை தேசிய கொவிட் 19 நிதியத்திற்கு ஆளுநர் அலுவலகம் வழங்கியுள்ளது.

மிகுதி 2 கோடியே எட்டு இலட்சம் ரூபாவினை வீட்டுத்திட்டம் மற்றும் மலசல கூடம் அமைக்க பயன்படுத்துவதாக ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக ஆளுநர் அலுவலகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வழங்கிய தகவலில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

குறித்த நிதியானது பிரதி பிரதம செயலாளர் (நிதி) அலுவலக வங்கி கணக்கில்  வைப்பில் உள்ளது என்றும் இதனை திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் கோவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருமானம் இழந்து வாழ்வாதாரம் குன்றி நலிவடைந்து வாழ்விடங்களும் இன்றி இருக்கின்ற குடும்பங்களுக்கு ஒரு பயனாளிக்கு 9 இலட்சம் ரூபா வீதம் 20 பயனாளிக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கும். 

அவ்வாறே ஒரு பயனாளி ஒவருக்கு
ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா படி 20 பயனாளிகளுக்கு மலசல கூடங்கள் அமைப்பதற்கும் வழங்கப்பட்டு வருகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கில் மாகாண சபைக்கு கிழ் இயங்குகின்ற மாவட்ட வைத்தியசாலைகள் உட்பட பல வைத்தியசாலைகளில் கொரோனா நெருக்கடியினை சமாளிப்பதற்கு போதிய வளமின்றி தவித்துவரும் நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் செயற்பாடு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post