அடுத்த சிலநாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - ஹேமந்த ஹேரத் - Yarl Voice அடுத்த சிலநாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - ஹேமந்த ஹேரத் - Yarl Voice

அடுத்த சிலநாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - ஹேமந்த ஹேரத்




அடுத்த சிலநாட்களில்  கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் பேரிடர் தயாரிப்பு பிரிவின் தலைவர் மருத்துவர் ஹேமந்தஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் நோயாளர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ள போதிலும் அது மீண்டும் அதிகரிக்கலாம் என எதிபார்க்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சனத்தொகையுடன்  ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்தம் அறிவிக்கப்படும் நோயாளர்களின் வீதம் உயர்வானது என அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் 3500 என்ற எண்ணிக்கையிலிருந்து குறைவடைந்துள்ள போதிலும் மீண்டும் அதிகரித்தபின்னரே அது குறைவடையும் என நிபுணர்கள்  தெரிவித்துள்ளனர் என ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post