தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வடமராட்சியில் உலருணவு விநியோகம் - Yarl Voice தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வடமராட்சியில் உலருணவு விநியோகம் - Yarl Voice

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வடமராட்சியில் உலருணவு விநியோகம்



தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில் வாய்ப்பிழந்த 
குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. 

இதன் ஒருகட்டமாக வடமராட்சியில் நேற்று (27.06.2021) அரிசி, கோதுமை மா, பருப்பு, சோயா மீற், சீனி, பால்மா, தேயிலை ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இமையாணன், அல்வாய் மேற்கு, துன்னாலை, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் 
தலைவர் பொ. ஐங்கரநேசன் நேரடியாகச் சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post