அதிபர் -ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்படாவிடில் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் தீவிரப்படுத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமருடனான இன்றைய கலந்துரையாடலில் முறையான தீர்வு காணப்படவில்லை என அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிபர் -ஆசிரியர் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை, உப குழுவொன்றை நியமித்துள்ள தாகவும் அவர்களுடன் கலந்துரையாட தொழிற் சங்கங்களைக் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அத்தகைய குழு பற்றி யாருக்கும் தெரியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment