உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும்! சிறுவர் உரிமையைப் பாதுகாக்க கோரியும் யாழில் போராட்டம் - Yarl Voice உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும்! சிறுவர் உரிமையைப் பாதுகாக்க கோரியும் யாழில் போராட்டம் - Yarl Voice

உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும்! சிறுவர் உரிமையைப் பாதுகாக்க கோரியும் யாழில் போராட்டம்




முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழில் உள்ள மகளிர் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ் நகர மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களின் எதிர்காலத்தை சிதைக்காதே, வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம், பாதுகாப்போம் பாதுகாப்போம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம், மலையகச் சிறுமிக்கு நீதி வேண்டும், பாலியல் வன்முறை வேண்டவே வேண்டாம், பாதுகாப்போம் பாதுகாப்போம் சிறுவர் உரிமையைப் பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை இதன்போது எழுப்பியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பிரத்தியோக செயலாளர் திருமதி உமா சந்திரா பிரகாஷ் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



















0/Post a Comment/Comments

Previous Post Next Post