6 வருடங்களின் பின்னர் இலங்கை- ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம் - சுற்றுலாப் பயணிகளுடன் வந்தது விமானம் - Yarl Voice 6 வருடங்களின் பின்னர் இலங்கை- ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம் - சுற்றுலாப் பயணிகளுடன் வந்தது விமானம் - Yarl Voice

6 வருடங்களின் பின்னர் இலங்கை- ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம் - சுற்றுலாப் பயணிகளுடன் வந்தது விமானம்



இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நேரடி விமான சேவை கள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் ஆறு வருட இடைவேளைக்குப் பின்னர் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்க மீண்டும் நேரடி விமானச் சேவையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவின் மெஸ்கோவில் இருந்து பயணத்தை ஆரம் பித்த UL 534 என்ற விமானம் இன்று காலை 6.30 மணிக்கு கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் 51 பேர் குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் தொடர்ந்து விமானச் சேவைகள் முன்னெடுக் கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post