அரசாங்கம் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும் - ஐக்கிய மக்கள்சக்தி - Yarl Voice அரசாங்கம் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும் - ஐக்கிய மக்கள்சக்தி - Yarl Voice

அரசாங்கம் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும் - ஐக்கிய மக்கள்சக்தி




நாட்டில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை அரசாங்கம் செவிமடுக்கவேண்டும் தன்னிச்சையாக செயற்படக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார அதிகாரிகள் டெல்டா கொரோனா வைரஸ் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை அரசாங்கம் செவிமடுத்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுக்க கூடாது அரசியல் இலாபங்கள் குறித்து சிந்திக்க கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post