ஜனாதிபதி கோத்தபாயவிடம் சரத் பொன்சேகா எம்பி விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice ஜனாதிபதி கோத்தபாயவிடம் சரத் பொன்சேகா எம்பி விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice

ஜனாதிபதி கோத்தபாயவிடம் சரத் பொன்சேகா எம்பி விடுத்துள்ள வேண்டுகோள்




இலங்கையில் கொவிட் மரண எண்ணிக்கை செப்டெம்பர் மாதத்துக்குள் 4 இலக்கமாக உயரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் குறைந்தது இரு வாரங்களுக்கு நாட்டை மூடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாட்டை மூடுவதன் மூலம் மரண அதிகரிப்பு  3 இலக்கங் களுடன் நிறுத்தப்பட வேண்டும் அவர் தனது முகநூல் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். 

மேலும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பொது மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டால் ஃபைசர் அல்லது மொடர்னா போன்ற வலுவான தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post