ஊரடங்கு நேரத்தில் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் தூக்கி வீசிய விஷமிகள்! - Yarl Voice ஊரடங்கு நேரத்தில் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் தூக்கி வீசிய விஷமிகள்! - Yarl Voice

ஊரடங்கு நேரத்தில் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் தூக்கி வீசிய விஷமிகள்!



வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி ஊரத்தி பகுதியில் உள்ள காணிகளில் இருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் தூக்கி வீசிய சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஊரடங்கு காரணமாக யாரும் வெளியில் வராத சந்தர்ப்பத்தில் இனந்தெரியாதவர்கள் வயல்களில் இருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை தூக்கி கிணற்றில் வீசியுள்ளனர்.

காலை வேளையில் வயல் உரிமையாளர்கள் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை தேடியபோது அவை கிணற்றில் தூக்கி வீசப்பட்டு இருந்தமை அவதானிக்கப்பட்டது.

சுமார் எட்டு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டு இருந்ததுடன் இரண்டு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் காணாமல் போயுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post