யாழில் மயங்கி வீழ்ந்து இறந்தவருக்கு கொரோனா - Yarl Voice யாழில் மயங்கி வீழ்ந்து இறந்தவருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் மயங்கி வீழ்ந்து இறந்தவருக்கு கொரோனா



யாழில் செபம் சொல்லிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து மரணமான குடும்பப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

வடமராட்சி - அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடி யைச் சேர்ந்த செபபாக்கியம் கிறேஸ் மணி (வயது- 51) என்பவரே இவ்வாறு உயிரிழந் தார். 

உயிரிழந்த பெண் கோவளம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஜெபித்துக் கொண்டிருந்தபோது மயங்கி வீழ்ந்தார். 

அவரை உடனடியாக பருத்தித் துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டார்  என்று தெரிவிக்கப் பட்டது. 

அவரின் உடலில் இருந்து பெறப் பட்ட மாதிரிகள் நேற்று பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட போது அவருக்கு தொற்று இருந்தமை உறுதிப்படுத் தப்பட்டது. 

பருத்தித்துறை மரண விசா ரணை அதிகாரி சதானந்தன் சிவராசா மேலதிக விசாரணை களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post