உணவு விலையைக் கட்டுப்படுத்த அவசரகால விதிமுறைகளை பயன்படுத்த தேவையில்லை - சரத் பொன்சேகா - Yarl Voice உணவு விலையைக் கட்டுப்படுத்த அவசரகால விதிமுறைகளை பயன்படுத்த தேவையில்லை - சரத் பொன்சேகா - Yarl Voice

உணவு விலையைக் கட்டுப்படுத்த அவசரகால விதிமுறைகளை பயன்படுத்த தேவையில்லை - சரத் பொன்சேகா




உணவு விலையைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் இன்னும் பல கட்டுப்பாடுகளை உபயோகிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எந்த பேரிடரையும் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் இருக்கும் போது அவசரகால விதிமுறைகளை விதிப்பதற்கான அரசாங்கத்தின் நோக்கங்கள் தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் விதிக்கக்கூடிய வேறு பல கட்டுப்பாடுகள் உள்ளன. சந்தையை கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் அவசரச் சட்டத்தை விதித்தால், அரசாங்கம் ஒரு போரைச் சமாளிக்க முடியும் என நான் நினைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post