நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு தீவிரம்! - Yarl Voice நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு தீவிரம்! - Yarl Voice

நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு தீவிரம்!



வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்றைய தினம் நல்லூர் ஆலய உள்வீதியில் இடம்பெறுகின்ற நிலையில் தற்போது உள்ள கொரோனா இடர்  நிலையில்  அடியவர்கள் ஒன்று கூடினால் தொற்று  பரவல் ஏற்பட  கூடிய நிலை காணப்படுவதன் காரணமாக

 நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க  அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் முகமாக  நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆலய வளாகத்தில் அடியவர்கள் ஆலய வளாகத்தில் வராதவாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்

 ஆலய உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட்  செல்ல அனுமதிக்கப்படவில்லை அத்தோடு ஆலயத்திற்கு முன்பாக பொலிசாரின் பேருந்து வண்டி ஒன்று வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ள தோடு  நல்லூர் ஆலய வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post