யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் சற்று முன்னர் நிகழ்நிலையில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக் கழகத்தின் யூரியூப் மற்றும் முகப் புத்தக பக்கங்கங்களினூடாக நேரலையில் ஒளி பரப்பப்படுகிறது.
இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் சுமார் ஆயிரத்து 700 பேரின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.
Post a Comment