கொவிட்- 19 நிலைமை மீண்டும் கட்டுப்பாட்டை மீறலாம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - Yarl Voice கொவிட்- 19 நிலைமை மீண்டும் கட்டுப்பாட்டை மீறலாம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - Yarl Voice

கொவிட்- 19 நிலைமை மீண்டும் கட்டுப்பாட்டை மீறலாம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்



சில விடயங்கள் தொடர்பில் தேவையான கவனம் செலுத்தப்படாவிடின், நாட்டில் கொவிட்-19 நிலைமை மீண்டும் கட்டுப்பாட்டை மீறக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதது, நெகிழ்வான வேலை நேரம் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான இளைஞர்கள் தடுப்பூசியைப் பெறாதது ஆகியவை தீவிரமான மற்றும் உடனடி கவனம் தேவைப்படும் முக்கிய காரணிகள் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் உதவி செயலாளரான வைத்தியர். நவீன் டி சொய்சா, தற்போது போதிய பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாத நிலையில் பொதுமக்களை குறை கூற முடியாது என்றார்.
கொவிட் -19 க்கு எதிராக இளைஞர்கள் தடுப்பூசி போட மறுப்பது நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு கவலைக்குரிய விடயம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் இன்னொரு அலை எழுந்தால், மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post