நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகத் தயார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு - Yarl Voice நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகத் தயார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு - Yarl Voice

நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகத் தயார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு




நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்தார். 

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகுவதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்த கருத்துக்குத் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதி ஒருவா் ஓய்வு பெற்ற பின்னா், அவருக்கு அமைச்சா் ஒருவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தாம், இன்று வசிப்பது அமைச்சா் ஹெகலிய ரம்புக்வெல்ல வசித்த வீடாகும் என்றும்  அவர் தெரி வித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post