பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயார்! அழுகுரல் கேட்டு ஓடிவந்து காப்பாற்றிய அயலவர்கள்! - Yarl Voice பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயார்! அழுகுரல் கேட்டு ஓடிவந்து காப்பாற்றிய அயலவர்கள்! - Yarl Voice

பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயார்! அழுகுரல் கேட்டு ஓடிவந்து காப்பாற்றிய அயலவர்கள்!


 யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை அவ்இளம் பெண்ணும் , அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முனைந்ததாகவும், அதன் போது குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்டுக் காப்பாற்றியதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post