தொடரும் மழையால் வெள்ளத்தில் குடாநாடு! பலரும் பாதிப்பு - Yarl Voice தொடரும் மழையால் வெள்ளத்தில் குடாநாடு! பலரும் பாதிப்பு - Yarl Voice

தொடரும் மழையால் வெள்ளத்தில் குடாநாடு! பலரும் பாதிப்பு



யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிக  மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி  காட்சியளிக்கின்றது.

வெள்ளநீர் தேங்கி நிற்பதன்  காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி விதியானது பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி வீதியான  போலீசாரால் அறிவிக்கப்பட்டு வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு இன்று அதிகாலை முதல் பெரும் மழை பொழிகின்றது. இதனால்  நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றது. 

இதேநேரப் யாழ் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரான்லி வீதி, கண்ணாபுரம், சோலைபெரம், கற்குளம், பொம்மைவெளி, நித்திய ஒளி,  மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகர சபை பிரதேசங்கள் நீரில் மிதக்கின்றன. 



0/Post a Comment/Comments

Previous Post Next Post