சுனாமியால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் உடுத்துறையில் அனுஷ்டிப்பு! - Yarl Voice சுனாமியால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் உடுத்துறையில் அனுஷ்டிப்பு! - Yarl Voice

சுனாமியால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் உடுத்துறையில் அனுஷ்டிப்பு!



சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம்- வடமராட்சியில் அனுஷ்டிக்கப்பட்டது.

உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி - உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.

கடந்த 2 ஆயிரத்து 4 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post