மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை - Yarl Voice மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை - Yarl Voice

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை



மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றது என்று பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதே வேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வருகின்றது

0/Post a Comment/Comments

Previous Post Next Post