அரச நிர்வாகத்தை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை பிரதமரிடம் இருந்து கற்றுக் கொள்ளுமாறு முன்னாள் விவசாய அமைச்சரான ஹேமகுமார நாணயக்கார ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இயற்கை விவசாயம் தொடர்பில் சற்றும் அறியாத சிலர் ஜனாதிபதிக்கு இந்த விடயம் தொடர்பில் ஆலோசனை வழங்கியதாகவும், இதனால் நாட்டில் விவசாயம் சீரழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விவசாய இரசாயன உர இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் அரசாங்கம் நாட்டை தன்னிறைவு பெற்ற தேசமாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவறுகளினால் நாட்டில் இயற்கை விவசாயம் தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்த போது, அதிகாரிகளையும் அரசாங்கத்தையும் ஜனாதிபதி குற்றம் சாட்டுவதற்கான காரணம் என்ன என்றும் அவர் வினவியுள்ளார்.
மேலும், பல ராஜபக்ஷக்களை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் எனவும், அரச நிர்வாகம் தொடர்பில் பிரதமரிடம் இருந்து அறிந்து கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிகாரிகளின் உதவியின்றி இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள முடியாது என்ற ஜனாதிபதியின் உணர்வு முதிர்ச்சியற்றது என ஜனாதிபதி பல தடவைகள் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 20வது திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம், எந்தவொரு முடிவையும் எடுக்கவும் நிறைவேற்றவும் அவருக்கு போதுமான அதிகாரங்கள் உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment