சாவகச்சேரி பகுதியில் ரயிலில் மோதுண்ட இளைஞர் படுகாயம்! - Yarl Voice சாவகச்சேரி பகுதியில் ரயிலில் மோதுண்ட இளைஞர் படுகாயம்! - Yarl Voice

சாவகச்சேரி பகுதியில் ரயிலில் மோதுண்ட இளைஞர் படுகாயம்!



யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் இன்று காலை சாவகச்சேரி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இருந்தவரை மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி-கச்சாய் வீதி புகையிரதக் கடவைக்கும்-கந்தையா வீதி புகையிரதக் கடவைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. இதில் கல்வயல் முதலாம் கட்டை சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதான பிரகாஷ் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு காது கேளாமை காரணமாகவே குறித்த விபத்து நேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post