உலக சந்தையில் பால்மாவின் விலை குறையும் பட்சத்தில் நுகர்வோருக்கு நன்மைகளை வழங்க தயாராக இருப்பதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் பால்மா தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு டொலர் நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் சர்வதேச ஏலத்திற்கு ஏற்ப பால்மாவின் விலை தீர்மானிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த எட்டு வாரங்களாக ஏலத்தில் பால்மா விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய விலையில் பால்மாவை முன்பதிவு செய்யாவிட்டால் இறக்குமதியாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
தற்போதைய விலையை அதிக காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறோம்.
உள்ளூர் மற்றும் சர்வதேச வங்கிகளில் கடன் பத்திரங்களை திறப்பதிலுள்ள சிரமமே முக்கிய காரணம்.
புதிய பங்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் புதிய விலையில் விற்கும் அதேவேளையில் தற்போதுள்ள கையிருப்புகளைக் கொண்ட நிறுவனங்கள் முந்தைய விலையில் பால்மாவை வழங்க வேண்டும்.
வரிசைகள் மற்றும் தட்டுப்பாடு இன்றி பால்மாவைப் பெறுவதற்கான கால அவகாசம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பெப்ரவரி மாதத்திற்குள் கையிருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டொலர் பிரச்சினையை அரசாங்கத்துடன் இணைந்து தீர்க்க வேண்டும். பின்னர் நிறுவனங்கள் முன்பதிவுகளை
அதிகரிக்கும்.
கடன் பத்திரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தற்போதுள்ள முன்பதிவுகள்
செயற்படுத்தப்படவில்லை.
இருப்பினும் நிறுவனங்கள் விரும்பினால் குறைந்த விலையில் பால்மாவை விற்பனை செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment