இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து  வருகிறது. அதிகரித்து வரும் கொரொனா பாதிப்புக்கு எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை.  அந்த வகையில்,  மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத்சிங்,  லேசான அறிகுறிகளுடன் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டுத்தனிமையில் உள்ள்ளேன். சமீபத்தி என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
 
Post a Comment