யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் புதிய தொழிற்சாலை! யாழில் சஜித் உறுதி - Yarl Voice யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் புதிய தொழிற்சாலை! யாழில் சஜித் உறுதி - Yarl Voice

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் புதிய தொழிற்சாலை! யாழில் சஜித் உறுதி



எமது ஆட்சியில் யாழில் உள்ள பத்துத் தேர்தல் தொகுதிகளிலும் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வலிவடக்கு மாவை கலட்டி கொல்லங்கலட்டி பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அனைவரும் அறிவீர்கள்.

நாட்டில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்பு இல்லாத நிலையில் சிறந்த திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதற்குரிய தலைமைத்துவமும் இல்லை. 

யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகள்  பத்து தேர்தல் தொகுதிகள் உள்ள நிலையில் இவை அனைத்திற்கும்  சென்றவன் என்ற அடிப்படையில் மக்கள் பிரச்சனைகள் பற்றிய  நன்கு தெரியும்.

குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு காங்கேசன்துறை மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது .

நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் பல்வேறு தேவைப்பாடுகள் மற்றும் தீர்க்க வேண்டிய  பல பிரச்சனைகள் உள்ளதை நான் அறிவேன்.

அதன் காரணமாகவே இயலுமானவரை மக்கள் மத்தியில் சென்று அவர்களின் குறைகளை கேட்டு வருகிறேன்.

யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறேன் காங்கேசன்துறையில் வைத்து என்னால் உறுதிமொழியை வழங்கமுடியும் யாழ் மாவட்டத்தில் உள்ள 10 தேர்தல் தொகுதிகளிலும் 10 தொழிற்சாலைகளை எனது ஆட்சியில் நிறுவேன்.

நாட்டில் தற்போது மக்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை ஆட்சியாளர்கள் தொடர்பில் மக்கள் விரக்தியின் விளிம்பில் சென்றிருக்கிறார்கள்.

அகவே மக்களைப் புறந்தள்ளி நடக்கும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களுடன் மக்களுக்காக பயணிக்கும் அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன புத்திக பத்திரன மற்றும் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளருமான உமா சந்திரபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் குறித்த நிகவை ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் ஒழுங்கு செய்திருந்தார்.75

0/Post a Comment/Comments

Previous Post Next Post