சர்வதேச நாணய நிதியத்தினை நாடுவது குறித்து நாளை அமைச்சரவையில் தீர்மானம் - Yarl Voice சர்வதேச நாணய நிதியத்தினை நாடுவது குறித்து நாளை அமைச்சரவையில் தீர்மானம் - Yarl Voice

சர்வதேச நாணய நிதியத்தினை நாடுவது குறித்து நாளை அமைச்சரவையில் தீர்மானம்



சர்வதேச நாணய நிதியத்தினை நாடுவது குறித்து நாளை அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தை (IMF)  நாடுவது  குறித்து நாளைய (03) அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என இரண்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கியின்  ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் நாட்டின் நிதி நிலைமை மற்றும் வெளிநாட்டு கையிருப்பு நிலை குறித்து நாளை அமைச்சரவைக்கு விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு நேற்று நாடு திரும்பிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டுமா என்பது நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முடங்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என்பதில்  கப்ரால் உறுதியாக இருக்கிறார். எனினும் IMF க்கு செல்ல வேண்டுமா என்பது குறித்தும் அமைச்சரவையின் மூடிய கதவுகளுக்குள்ளும் அரசாங்க அமைச்சர்கள் மத்தியில் பகிரங்கமாக நடக்கும் பேச்சுக்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். நாட்டின் நிதி நிலை குறித்து மத்திய வங்கியின் ஆளுநரால் எடுத்துக்கூறப்படும்.

இதேவேளை பொருட்களின்  விலைகள் விண்ணை முட்டும் என்று  அமைச்சர் சி.பி ரத்நாயக்க சண்டே  ரைம்ஸிடம் தெரிவித்தார். “இந்த ஆண்டு பல பில்லியன் டொலர் கடனை நாங்கள் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் பல்வேறு அரச துறை தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் போராட வேண்டியுள்ளது. இது எளிதான காரியம் அல்ல” என்றார்.

இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தான் தனிப்பட்ட முறையில் நம்புவதாக  சி.பி. ரத்நாயக்க கூறினார்.  சர்வதேச நாணயநிதியம் எங்கள் மீது சுமத்த விரும்பும் அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை, ஆனால் நாம் குறைந்தபட்சம் ஒரு உரையாடலையாவது நடத்த வேண்டும்.  

சர்வதேச நாணய நிதிய உதவியை நாடுவதில் அமைச்சரவை பிளவுபட்ட நிலையில், பெரும்பாலான அமைச்சரவை அமைச்சர்கள்  சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கு ஆதரவாக இருப்பதாக தான் நம்புவதாக அமைச்சர் கூறினார்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகையில், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை  பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவையில் உள்ள இரண்டு அமைச்சர்களில்   அமரவீரவும்  மற்றையவர்  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கு ஆதரவாக உள்ளனர். 

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார போன்ற பல அமைச்சரவை அமைச்சர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post